×

கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்

அண்ணாநகர், மே 4: கோயம்பேடு பூ மார்க்கெட் வழக்கம்போல் நாளை இயங்கும், என்று மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மதுரையில் நாளை (5ம் தேதி) நடைபெற உள்ள வணிகர்கள் மாநாட்டில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக காய்கறி மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும், என்று கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்ககங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்துள்ளார். இந்நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை (5ம் தேதி) வழக்கம் போல் இயங்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூ வகைகளை வழங்கம்போல் வாங்கிச் செல்லலாம், என்றார்.

The post கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,market ,Annanagar ,vice president ,Muthuraj ,Madurai ,Dinakaran ,
× RELATED வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி;...